Saturday, March 28, 2009

ரிக்கா கிளையில் மார்க்க சொற்பொழிவு:-

ரிக்கா தமுமுக கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி:
:27.03.2009 .வெள்ளி குவைத் ரிக்கா பகுதியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை மௌலவி அப்துல் ரஹ்மான் நிஸாமி கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.மண்டலச் செயலாளர் ஷாநவாஸ் தொகுத்து வழங்கினார்.கிளை செயலாளர் ஜெ.ஜாபர் அலி வரவேற்புரை ஆற்றினார்.மார்க்க ஒழுக்கங்களை பேணுதல் என்ற தலைப்பில் மௌலவி அன்சர் ஹுசைன் ஃபிர்தௌசி[இஸ்லாமிய அழைப்பாளர்] உரையாற்றினார். மார்க்க கடைமைகளை அன்றாட வாழ்வில் பேணுதல் என்ற தலைப்பில் மௌலவி ஜமாலுத்தின் ஃபாஷி[இஸ்லாமிய அழைப்பாளர்] உரையாற்றினார்.நிகழ்ச்சியில்
அப்துல் அஜீஸ்,நா.பீர்மரைக்காயர்,அ.அப்துல் வாஹித்,குவைத் மீடியா செயலாளர் எஃப்.என்.முஜிபுர் ரஹ்மான்.மற்றும் ஏறாளமானோர் கலந்து பயனடைந்தனர்.
இரவு உணவுடன் கிளைத் தலைவர் எ.சாதிக் பாட்ஷா,கிளை பொருளாள‌ர் வி.சாதிக்.ஆகியோரின் ஒருங்கினைப்பில் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
நிக‌ழ்ச்சி ஏற்பாடு ஃபாஹ‌ஹில் துனை ம‌ண்ட‌ல‌ம்.

Friday, March 27, 2009

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...

தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில்
http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள்
மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர்
பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர்
பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக்
கொள்கிறோம்..
இணையத்திலேயே http://www.elections.tn..nic.in/forms.htm படிவங்கள்
அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை
வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை
தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும்
வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர்
பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.
குறிப்பாக: முஸ்லிம் வாக்காளர்கள் சமுதாய நலன் கருதி பெயர் சரிபாக்கும்
விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அக்கரையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, March 25, 2009

நெல்லை மாநகராட்சி முற்றுகை

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நெல்லை மாநகராட்சி முற்றுகைதிருநெல்வேலி மாநகராட்சி 29வது வார்டு மேலப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட ஹாமீம்புரம் 1 முதல் 12 தெருக்களுக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் குடிநீருக்காக சிரமப்பட்டனர். இந்நிலையை போக்கக் கோரி நெல்லை மாநகராட்சியை 21.03.2009 அன்று காலை தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாருக் தலைமையில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் திரண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். இப்பகுதியில் இரண்டு தினங்களில் குடிநீர் பைப்புகள் சரி செய்யப்படும் என்றும் அதுவரை இப்பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் கமிஷனர் உறுதியளித்தார்.அப்போது மாவட்ட துனை தலைவர் கே.ஸ்.ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் உஸ்மான் கான், மேலப்பாளையம் நகர தலைவர் மைதீன் பாதுஷா, செயலாளர் காசீம் பிர்தௌசி,பொருளாள‌ர் காஜா, 29வது வார்டு, செயலாளர் பி.செய்யது அப்துல் காதர், தலைவர் கபூர், பொருளாளர் ஞானியார், துனை செயலாளர் சுல்தான், துனை தலைவர் அஜீஸ், மருத்துவ அணி செயலாளர் எ.கே.அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Friday, March 20, 2009

திருநெல்வேலி செங்கோட்டையில் நாளை ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மார்ச் 18:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் உஸ்மான்கான் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் மீது போலீஸôர் பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்.
இதைக் கண்டித்தும், பொய் வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைச் செயலர் எஸ். மைதீன் சேட்கான் தலைமை வகிக்கிறார்.

Monday, March 16, 2009

மமகவின் முதல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

மேலப்பாளையம், மார்ச்.17-
சிறுபான்மை இன மக்களின் ஆதரவு இல்லாமல் மத்தியிலும், மாநிலத்திலும் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது`` என்று, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எஸ்.ஹைதர் அலி கூறினார்.
பொதுக்கூட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் நிலை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக வளைகுடா பகுதிகளுக்கான முன்னாள் செயலாளர் கே.ஏ.பசூலுல்லாஹி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான எஸ்.ஹைதர் அலி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமுதாய மக்களுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஆனால் அரசியல் ரீதியாக செயல்பட ஒரு அமைப்பு தேவை என்பதால் இந்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி மனித நேய மக்கள் கட்சி உருவானது. இதில் முஸ்லிம்களுடன், முஸ்லிம் அல்லாத மக்களும் இணைந்துள்ளனர்.
நாட்டில் 20 சதவீதமாக உள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு அரசியல், ஆட்சி அதிகாரம் போன்றவற்றுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இந்த அமைப்பு தொடர்ந்து பாடுபடும். இது தவிர தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த அமைப்பு போராடும். அரசியலில் தூய்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் இயக்கமாக இந்த கட்சி கடைசி வரை பாடுபடும். மத்தியிலும், மாநிலத்திலும்
கடந்த தேர்தலின் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மத்தியில் காங்கிரசையும், மாநிலத்தில் தி.மு.க.வையும் ஆதரித்தது. ஆனால் இந்த 2 இயக்கங்களும் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டன. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்த 7 சதவீத இடஒதுக்கீடு தரவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் இதுபற்றி எடுத்துக்கூறவில்லை.
வாணியம்பாடி, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் த.மு.மு.க.வுக்கு தருவதாக உறுதி அளித்த தி.மு.க. அதை செயல்படுத்தவில்லை. எனவே தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிக்க மனித நேய மக்கள் கட்சி களம் இறங்கியுள்ளது. சிறுபான்னை மக்களின் ஆதரவு இல்லாமல் மத்தியிலும், மாநிலத்திலும் இனிமேல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. 15-வது பாராளுமன்றத்தில் மனித நேய மக்கள் கட்சி பிரதிநிதிகள் தமிழகத்தில் இருந்து நிச்சயம் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எஸ்.ஹைதர் அலி பேசினார். கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் காஞ்சி பி.அப்துல்சமது, மாவட்ட த.மு.மு.க. செயலாளர் உஸ்மான்கான், துணை செயலாளர் கே.எஸ்.ரசூல் மைதீன், மேலப்பாளையம் த.மு.மு.க. நகர தலைவர் கே.கே.மைதீன், செயலாளர் காசிம் பிர்தவுசி, பொருளாளர் ஏ.காஜா குவைத் மங்காஃப் கிளைச் செயலாளர் செய்யது ஹஜ்ஜப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குவைத்தில் ரிக்ஃகா பகுதியில் புதிய தமுமுக கிளை துவக்கப் பட்டது.

வெள்ளி,march,13,2009
குவைத் மண்டலம், ரிக்ஃகா பகுதியில் புதிய தமுமுக கிளை துவக்கப் பட்டது. நிகழ்ச்சியை ஷாநவாஸ்.கிராத் ஓதி தொடங்கிவைத்தார்.
ஜாஃபர் அலி . வரவேற்புரை ஆற்றினார்.
குவைத் மண்டல செயலாளர் ஷா நவாஸ் தலைமை தாங்கினார், துணை மண்டல பொருளாளர் அப்துல் அஜீஸ் முன்னிலை உரையில் மக்கள் உரிமை பத்திரிகையின் அவசியம் குறித்து பேசினார்.துணை மண்டல செயலாளர் அ.அப்துல் வாஹித், கிளையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். சிட்டி துணை மண்டலத் தலைவர் நா.பீர் மரைக்காயர், தமுமுக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பேசினார். பின்பு கிழ்கண்ட வாரு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டார்கள். கிளைத் தலைவராக கொள்ளிடம் தைக்கால் A.சாதிக், கிளைச்செயலாளராக‌ அய்யம்பேட்டை ஜாஃபர் அலி, பொருளாளராக திருவாரூர். V.சாதிக்.ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
ரிக்ஃகா கிளைத்தலைவர் நன்றி உரையாற்றினார்.
இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

Saturday, March 14, 2009

அல்லாஹ்-வின் பக்கம் விரைந்து வாருங்கள்...

அல்லாஹ்-வின் பக்கம் விரைந்து வாருங்கள்... மாபெரும் இஸ்லாமிய மாநாடு

Tuesday, March 10, 2009

மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை:-

திருநெல்வேலி
மேலப்பாளையத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் லட்சிய திருமணவிழா த.மு.மு.க. ஏற்பாட்டில் நேற்று காலை நடைபெற்றது. லட்சிய திருமணம்திருமணத்தில் வரதட்சணை வழங்குவதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் மணமகன், மணமகளுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் விழா நேற்று மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மேலப்பாளையம் செய்குல் அக்பர் தெருவில் நேற்று காலை 11 மணிக்கு நடந்த விழாவுக்கு த.மு.மு.க. மாநில பொருளாளர் ரகுமத்துல்லா தலைமை தாங்கினார். வரதட்சணை கொடுத்தார்விழாவில் மணப்பெண் எஸ்.ஏ.முகர்ரமாவுக்கு, மணமகன் எஸ்.முகமது அபுபக்கர் சித்திக் வரதட்சணை வழங்கினார். பின்னர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனின் தந்தை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் தண்டன் சேக்மன்சூர்,தாய் சிமிட்டி சுலைகா, மணமகளின் தந்தை சுல்தான் அப்துல்ஹமீது, தாய் மும்தாஜ் மற்றும் நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் பாருக்,செயலாளர் உஸ்மான்கான்,துணை செயலாளர் ரசூல்மைதீன்,நகர செயலாளர் காசிம் பிர்தௌசி,பொருளாளர் காஜா மைதீன்,மாநகராட்சி சுகாதார உணவு ஆய்வாளர்கள் சங்கரலிங்கம்,காளிமுத்து உள்பட த.மு.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வளைகுடா த.மு.மு.க. முன்னாள் அமைப்பாளர் முகமது பஸ்லுல் இலாஹி செய்திருந்தார்.