திருநெல்வேலி, மார்ச் 18:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் உஸ்மான்கான் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் மீது போலீஸôர் பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்.
இதைக் கண்டித்தும், பொய் வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைச் செயலர் எஸ். மைதீன் சேட்கான் தலைமை வகிக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment