Wednesday, April 22, 2009

குவைத் ரிக்கா பகுதியில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது:-

17.04.2009 வெள்ளி:-
குவைத் ரிக்கா பகுதியில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணிக்கு ஏன்? வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் குவைத் ஃபாஹஹீல் துனை மண்டல பகுதியான ரிக்கா பகுதியில் தமுமுக மற்றும் பிற சமுதாய சகோதர சொந்தங்களை வர வழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாயவரம் ஆடிட்டர் சாஹுல் ஹமீது தலைமை தாங்கினார். மண்டல தமுமுக செயலாள‌ர் ஷாநவாஸ் திருக்குர் ஆன் வசனம் ஓதி தொடங்கி வைத்தார்.அய்யம் பேட்டை ஜெ.ஜாபர் அலி முன்னிலை வகித்தார். ரிக்கா தமுமுக தலைவர் ஏ.சாதிக் வரவேற்று பேசினார்.
குவைத்தில் முதன் முறையாக:-
குவைத் தமுமுக வின் நான்கு வருட செயல்பாடுகளில் முதன் முறையாக‌ தமிழகத்திலிருந்து தமுமுக மாநில பேச்சாளர் சகோ:கோவை செய்யது அவர்கள் அலைபேசி மூலம் சிறப்புரையாற்றினார்.
குவைத் இஸ்லாமிய அழைப்பாளர்:-
புலவர்,டாக்டர் சாகுல் ஹமீது ஆலிம் அவர்களும் பேசினார்கள்.கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜமாத்தார்களையும் கூட்டனி தோழமை கட்சியினரை வைத்தும் சமூக நல ஆர்வலர்களையும் அழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்க்கு மக்கள் தொடர்பாளர் தஞ்சை அக்பர் பாட்ஷா, ஃபாஹஹீல் மண்டல தமுமுக செயலாளர் அ.அப்துல் வாஹித் மேலப்பாளையம், அற‌ந்தாங்கி அப்துல் அஜீஸ், சாதிக், புதுக்கோட்டை முஜிப்பூர் ரஹ்மான், குவைத் சிட்டி மண்டல தலைவர் நா.பீர்மரைக்காயர், கமருதீன் K O C, சத்ருத்தீன், மற்றும் பெரும்பாலன மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் கிளை பொருளாளர் வி.சாதிக் திருவாரூர் நன்றி உறையாற்றினார். இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
செய்திக‌ள்:நா.பீர்மரைக்காயர். துனை ம‌ண்ட‌ல த‌லைவ‌ர்.

Saturday, April 18, 2009

அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது:-

தமிழக அரசியலில் திருப்பு முனையாக தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளும் மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால், இக்கட்சிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. குவைத்தில் வசிக்கும் தமிழர்களை நேரில் சந்தித்தும். கலந்துரையாடல்கள் மூலமும் தமிழகத்தில் சுமார் 5 லட்ச ஓட்டுகள் குறி வைக்கப்பட்டுள்ளது. இதனை செயல் படுத்தும் விதமாக 16.04.2009 வியாழன் இரவு 7.30 மணியளவில் குவைத்‍ திருச்சி ஓட்டலில் வைத்து தொழிலதிபர்கள், இஸ்லாமிய இயக்க, மற்றும் சங்கத்தின் தலைவர்கள், முக்கியஸ்தர்களை அழைத்து அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குவைத் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் திருச்சி அமானுல்லாஹ், தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ஷா நாவாஸ் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார்.சிறப்புரையாற்ற சவுதி தம்மாம் மண்டல தலைவர் ஆரிப் மரைக்காயர்,கஸாலி குவைத்திலுள்ள பேராசிரியர் தாஜித்தின்,இஸ்லாமிய அலைப்பாளர் அன்வர் ஹுசைன் மற்றும் பல சமூதாய இயக்க தலைவர்கள் உரையாற்றினர். இக்கூட்டத்தில் தமுமுக நிர்வாகிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கினைப்பு: குவைத் தேர்தல் பணிக்குழு
தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்:
1.ஷாநவாஸ்
2.முஜிபுர்ரஹ்மான்
3.சாஹுல் ஹமீது
4.அமானுல்லாஹ்
5.இஸ்மாயில்
செய்திகள்:நா.பீர்மரைகாயர்.

Saturday, April 11, 2009

தொண்டர்கள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயார் ஆகி விட்டனர்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம ம க வேட்பாளர் டாக்டர். ஜவஹிருல்லாஹ் அவர்கள் களமிறங்கி இருப்பதால் அத்தொகுதி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி தொண்டர்கள் வரை உற்சாக வெள்ளத்தில் உள்ளனர். இங்கு போட்டியிடும் O.S மணியனுக்கும், M.H. ஜவஹிருல்லாஹ் அவர்களுக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும் என்று பரவலான பேச்சாக இருக்கிறது. இங்கு இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் மயிலாடுதுறை ம ம க வினர் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.
நாங்கள் கலைஞரின் பிரதிநிதியாகவோ, ஜெயலலிதாவின் பிரதிநிதியாகவோ தேர்தலில் நிற்காமல் சமுதாயத்தின் பிரதிநிதயாக நிற்கிறோம் என்று நெஞ்சுயர்த்தி சொல்லும் அளவிற்கு தொண்டர்கள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயார் ஆகி விட்டனர்.
மேலும் மயிலாடுதுறை தொகுதி நிலவரங்களை அறிய...
http://mmkpapanasam.blogspot.com/

Rajaghiri Gazzali

வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா!:-

வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான செ.ஹைதர் அலி அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
நான் இதுவரை வகித்து வந்த தமிழக வக்பு வாரியத் தலைவர் பொறுப்பிலிருந்து சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன்.
எனது கடமையை செம்மையாக செய்ய ஒத்துழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் சமுதாய சொந்தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Thursday, April 9, 2009

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு:-

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.
மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி,
மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.
சலிமுல்லாஹ் கான்

Thursday, April 2, 2009

பத்திரிக்கை செய்திகள்:-



செய்திகள் : நெல்லை உஸ்மான்

தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-
தென்காசி, ஏப். 1:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஒற்றைக் காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டு பகுதியில் மவுண்ட்ரோடு சாலையை புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரியும், இப் பகுதியில் தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரியாததைக் கண்டித்தும், புதுப்பிக்கப்பட்ட, சுகாதார வளாகத்தைத் திறக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர்மன்ற உறுப்பினரும் கட்சியின் ஒன்றியச் செயலருமான முகம்மது மைதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பா, கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சலீம், நகரச் செயலர் சலீம், பொருளாளர் சுலைமான் சேட், துணைச் செயலர்கள் சாகுல், திவான்ஒலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முடிவில் நகராட்சி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
செய்திகள் : நெல்லை உஸ்மான்